தூத்துக்குடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிதாக வாங்கப்பட்டுள்ள இயந்திரங்களை மாநகராட்சி அலுவலக்தில் வைக்கப்பட்டிருந்ததை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு தொிவிக்கையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி என்டு டூ என்டு என்ற முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றது மேலும் மாநகரை தூய்மையாகவும் மாசில்லாமலும் வைத்திருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதில் ஒரு பகுதியாக சாலை ஓரத்தில் குவியும் மணல்களை அகற்றுவதற்கு என்று முதற்கட்டமாக 10 மணல் அகற்றும் இயந்திரங்களை வாங்கியுள்ளோம், மேலும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும் மாநகர பகுதி முழுவதும் தூய்மையாக வைப்பதற்கு வீட்டிற்கு ஓரு மரம் வளா்ப்போம் என்ற திட்டத்தின் கீழ் மாசு இல்லாத மாநகரை உருவாக்குவதற்கு முழுமையாக அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். என்று மேயா் ஜெகன் பொியசாமி தொிவித்துள்ளார்.
உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொறியாளர் சரவணன், இணைஆணையர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்பட பலர் உடனிருந்தனர்.

