• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில்  மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில் அதிரடியாக தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும்  பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார பாராட்டிய  கிராம பொது மக்கள்!

policeseithitv by policeseithitv
January 26, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில்   மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதியில்  அதிரடியாக  தொடர்ந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு  வரும்   பஞ்.தலைவர் சரவணகுமார்:  மனதார  பாராட்டிய   கிராம பொது மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, ஜன,26

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பல்வேறு பகுதிகளில் மழை நீரானது வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே என் நேரு, கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் ஆகியோர் இரவு பகல் பாராமல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. அதன் பிறகு இந்தப் பகுதிகளில் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள் என பல்வேறு பணிகளை வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளோடு இணைந்து தொடர்ந்து இரவு பகல் பாராமல் ஒரு மாத காலமாக பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் செய்து வந்தார். இந்தத் தொடர் பணிகளால் பெரும் பாதிப்புகளில் இருந்த மாப்பிள்ளையூரணி கிராமம் தற்போது மீண்டு வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு  சுமார் 5 அடிக்கு மேல் வரை வெள்ள மழை நீர் வீட்டுக்குள் புகுந்து சூழ்ந்திருந்ததால் மாப்பிள்ளையூரணி கிராம பகுதிக்கு உட்பட்ட சுடலையா புரம்,எம். காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்தப் பகுதியில் பெரிய மின் மோட்டார்கள் தொடர்ந்து பல நாட்கள் வைத்து மழை நீரை அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் செய்து வந்தார். மழைநீர் அகற்றப்பட்டாலும், அந்தப் பகுதியில் உள்ள நீர் ஊற்றுகள் மூலம் இப்ப பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

இதனால்அப்பகுதி பொதுமக்கள்   குழந்தைகள் பெண்கள், ஆகியோர் மழை நீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் கிரஷர் மணல்கள் அமைத்து நடைபாதைக்கும், இருசக்கர வாகனங்கள் செல்ல தற்காலிக சாலைகள் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததன் பெயரில் உடனடியாக அந்தப் பகுதியில் கிரஷர் மணல்கள் லோடுகள் கொண்டு வந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மழைநீர் சூழ்ந்துள்ள சாலைகளில் கிரசர் மணல் கொண்டு தற்காலிக சாலை அமைத்துக் கொடுத்து அந்த சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஒரு மாத காலம் அப்பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வரும் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்

தற்போது கிரசர் மணல்கள் மூலம் தற்காலிக சாலை அமைத்துக் கொடுத்தது பொதுமக்களுக்கு மிகுந்த ஆறுதல் ஏற்படுத்தியது சுடலையாபுரம் மற்றும் எம். காமராஜபுரம் பொதுமக்கள், மற்றும் பெண்கள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமாரை மனதார பாராட்டினார்கள். இந்த அதிரடி ஆய்வின் போது பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உடன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண் பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா,

திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், கௌதம், உள்பட பலர் உடன் இருந்தனர் .

 

செய்தி தொகுப்பு :

எம்.கண்ணன்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை : கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !! தீர்மானம் நிறைவேறாததால் பொதுமக்கள் ஹேப்பி!!

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை : கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள்  கடும் எதிர்ப்பு !! தீர்மானம் நிறைவேறாததால் பொதுமக்கள் ஹேப்பி!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை : கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !! தீர்மானம் நிறைவேறாததால் பொதுமக்கள் ஹேப்பி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In