தூத்துக்குடி சந்திவிநாயகர் கோவிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்லா செல்வங்களும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், மழைவெள்ளத்தால் பாதித்த அனைத்து மக்களை பாதுகாக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் விளக்கு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் சந்திவிநாயகர் கோவிலில் இன்று காலை (21.1.2024) அன்று 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி காலை சிறப்பு அபிஷேகமும் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சிறிய விளக்கு கவுன்சிலர் சரன்யா ராஜ்குமார் வழங்கினார். பொய்சொல்லான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கருப்பசாமி, தலைவர் மோகன், செயலாளர் வேல்முருகன், உதவி செயலாளர்கள் குழந்தைவேல், ராம்தாஸ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், உதவிப்பொருளாளர் பேச்சிமுத்து, கமிட்டி உறுப்பினர்கள் எ.பாலசுப்பிரமணியன், ஆர்.பாலசுப்பிரமணியன், மஹாராஜா மணிகண்டன், திருமலை முருகன், சிவாகந்தவேல், பெரியநாயகம், கௌரவ ஆலோசகர்கள் சந்தனராஜ் ராஜசபரிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

