தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேப்பலோடை ஊராட்சியில், வடக்கு திமுக மாவட்ட – ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை சேர்மன் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

