தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் சேதத்தை தொடர்ந்து நிவாரண பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நகராட்சி பகுதியில் இருந்து சுமார் 800 பேருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாநகராட்;சி பகுதி முழுவதும் தூய்மை பணிகளை முழுமையாக செய்து வந்தனர். அப்பணியை செய்த அவர்கள் படிப்படியாக தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர் திரும்பினர். அவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தனது சொந்த பொறுப்பில் அசைவ உணவு அளித்து ஸ்வீட், டிரஸ், போர்வை, உள்ளிட்ட கிப்ட் பேக் வழங்கி வருகிறார்.
மாநகராட்சி அலுவலகத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய நபர்களுக்கு கிப்ட் பேக்கை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா, கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

