மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டதோடு, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே களத்தில் இறங்கியது.
சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதில் ஈடுபாடு காட்டி வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஒருங்கிணைத்தது. கார்கில் நகர், திருவொற்றியூர், அத்திப்பட்டு புதுநகர் ஆகிய இடங்களில் தனித் தனி உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பகுதிகளில் தேவைப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிப் பொருட்கள் இரவு பகல் பாராமல் கொண்டு சேர்க்கப்பட்டன.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர், படுக்கை விரிப்புகள், சுகாதார பெட்டகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டன. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுடைய உடனடி தேவைக்கேற்ப, இவை உரிய நேரத்தில் உரிய முறையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
மேற்கண்ட பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண முகாம்கள் மூலம், 4,000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரண உதவிகள், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் போய்ச் சேருவதற்கான வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக, குழந்தைகள், முதியோர், சிறப்புத் தேவையுடையோருக்கு, இந்த இடர்காலத்தில் தேவைப்படும் உதவிகள் கிடைக்குமாறு செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஏ. சுமதி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேர்வதில், இந்நிறுவனம் எவ்வளவு கவனத்தோடு இருக்கிறது என்பதை விளக்கினார். ‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டு மனம் கலங்குகிறது. இடர்கள் ஏற்படும் போதெல்லாம் தமிழ்நாட்டுடனும் தமிழர்களுடனும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் என்றும் துணை நிற்பதில் உறுதியாக இருக்கிறது. நாங்கள் வழங்கும் நிவாரணம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் உடனடி உதவியாகும். இதன் மூலம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள முடியும், மீட்பு நடவடிக்கையிலும் மறுவாழ்வு முயற்சிகளிலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறது. உள்ளூர் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து உதவுவோம்’ என்று தெரிவித்தார்.

