தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 16,17,18 வது வார்டுக்குட்பட்ட பி அன் டி காலனி, கதிர்வேல்நகர், பால்பாண்டி நகர், அன்னை தெரசாநகர், முத்துகிருஷ்ணாநகர், ஹரிராம்நகர், ஆகிய பகுதியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதிகளை பார்வையிட்டு தேவையான சாலை பணிகளை மற்றும் கழிவுநீர் வடிகால் கால்வாய் சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்முருகன், பாஸ்கர், மற்றும் மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

