தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் உள்ள காமராஜ்நகரில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை எண்: 10144 செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேர்வைக்காரன்மடம் கோவில் தெருவைச் சார்ந்த அருள் ஞானகணேஷ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக காமராஜர்நகர் பகுதியில் அரசின் அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது பார் நடத்த அரசு அனுமதி வழங்க உள்ள நிலையில் நான் தனிநபருக்குச் சொந்தமான கடையில் டாஸ்மாக் பார் அரசு டெண்டர் மூலமாக கடை எண்: 10144 எடுக்க பணம் செலுத்தி பார் நடத்த தயாராக உள்ள நிலையில் அந்த கடையை செயல்படுத்த விடாமல் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் என்பவர் ரூ.5,00,000- கேட்டு மிரட்டி வருகிறார். ஆனால் அந்த பகுதி டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் போது நிலையில் இதுவரை அப்பகுதி பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் பி.எம்.அற்புதராஜ் என்பவர் என்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்தில் அவரின் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார். மேலும், அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை வைக்க விடாமல் என்னால் செய்ய முடியும் என சவால் விடுகிறார்.
ஆகவே ஐயா அவர்கள் தயவு கூர்ந்து சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து பார் செயல்பட உரிய நடவடிக்கை எடுத்து காப்பாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் பணிந்த கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசு டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக ச.ம.க நிர்வாகி அற்புதராஜ் மீது சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞானகனேஷ் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள புகாரினால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

