தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்கம் என்ற தங்கம்மாள் 95 வயது மூதாட்டியிடம் இருந்து 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் தமிழக அரசு திரும்ப எடுத்த நிலையில் இன்று (24/11/2023) திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மூதாட்டியின் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப மூதாட்டிக்கு செக் மூலம் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தங்கம் என்ற தங்கம்மாள் 95 வயது மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மூதாட்டியின் வங்கி கணக்கில் கடந்த 36 மாதங்களாக வரவு வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய பணமானதை அவர் வங்கி கணக்கில் இருந்து திரும்ப அரசின் சார்பில் பெறப்பட்டது. இந்த செய்தியை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து வயதான முதியோர் உதவி தொகை முழுவதும் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாய் தொகை அனைத்தும் திரும்பவும் மூதாட்டி இடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 36,000 ரூபாய் பணத்தை கோட்டாட்சியர் குருசந்திரன் செக் மூலம் மூதாட்டி இடம் வழங்கினார். மூதாட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதில், வட்டாட்சியர் ரதிகலா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த விஷயத்தை யார் செய்த தவறு என்று விசாரித்துக் கொண்டு காலம் தாழ்த்தாமல் பணத்தை மூதாட்டி இடம் ஒப்படைத்த நிகழ்வு அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

