• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

policeseithitv by policeseithitv
November 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, ஐப்பான், இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி – இறக்குமதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி நகரமானது அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக உருவாகி வருகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது

இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாக பெயர் பெற்று விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உப்பு வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ஜவுளி துறை, அனல்மின்நிலையம், கெமிக்கல் நிறுவனங்கள், உரத்தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து வசதிகளும் அடங்கிய மாநகராக தூத்துக்குடி விளங்கி வருவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகனப் பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தலைநகரான தூத்துக்குடி மாநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகர்புற கட்டமைப்பு வசதிகளை அனைத்து பகுதிகளுக்கும் செய்து கொடுக்கும் கடமை மாநகராட்சிக்கு உண்டு. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் பல பகுதிகளில் மழைநீரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவில் அவல நிலை ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த மழைகாலத்தில் பெருமளவு பாதிப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, அப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, எதிர்கால மக்கள் நலனை கருதி நல்லமுறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. வருங்கால தலைமுறையினரின் மக்கள் நலன் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கடமைக்கு பணியாற்றினார்கள். அதனால் தான் தூத்துக்குடி மாநகரில் எதிர்பாராமல் பெய்த மழையால் முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், பிரையண்ட் நகர் என மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதே ஓர் காரணம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்ற பின் பொறுப்புக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 60 வார்டுகளிலும், கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மழைநீர் தேங்காமல் பசுமையான பகுதியாகவும், மாசு இல்லாத மாநகராகவும் உருவாக்கி காட்டுவதே எங்களது இலட்சியம். மற்ற கட்சியினரை போல் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரின் அபார வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமியால் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் நம்பர் 1 மாநகராட்சியாக கூடிய விரைவில் திகழும் என்பதில் ஐயமில்லை.

Previous Post

மாப்பிள்ளையூரணி பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

Next Post

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு – மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன்

Next Post
அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு –  மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன்

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு - மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In