தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்வின் மனைவி சுசிலா(39). இவர் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் (16) வயது சிறுமி நாழிக்கிணறு பகுதியில் பொறி கடலை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் சுசீலாவும், சிறுமியும் படுக்கச் சென்றுள்ளனர். இன்று காலை தூங்கி எழுந்த போது சிறுமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப் போட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து தாய் சுசீலா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன.?. வேலை செய்யும் இடத்தில் சிறுமிக்கு ஏதும் கொடுமை நடந்துள்ளதா.?. என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

