தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காலையிலேயே சென்று தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். மேலும் நீர் தேங்கிய இடங்கள் பள்ளமான பகுதிகள் ஆகையால் வரும் நாட்களில் அங்கும் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்வில் பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மாவட்ட சிறுபாண்மை அணியின் துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

