தூத்துக்குடி, நவ,8
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புதிய ஆடைகள், பட்டாசுகள் வாங்க தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் அர்ப்பணிப்பு உணர்வோடு நாள்தோறும் பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அனைத்து தரப்பு பொது மக்களும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது போன்று தூத்துக்குடியில் உள்ள தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்தி கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் பள்ளி அருகே உள்ள “அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராஜு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தூய்மை பணியாளர்கள் இன்ப தீபாவளியாககொண்டாட அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.

தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் சேலை, இனிப்புகள் கொடுத்து உதவிடும் அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர் ராஜு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டுக்கள் குவிகிறது.
மனிதநேயத்தோடு அன்பு விலாஸ் பழக்கடை நிறுவனர் ராஜு செய்து வரும் இந்த சிறப்புமிக்க பணியை போலீஸ் செய்தி நியூஸ் சேனல் குழுமம் சார்பிலும் மனதார பாராட்டுகிறோம்
செய்தி தொகுப்பு: சிறப்பு செய்தியாளர் சக்திவேல்

