கோவை மாவட்டத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு.!
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட நல்ல உடல்நிலையில் உள்ள ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் , காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், சிறப்பு காவலர்களாக பணியாற்றிட அழைக்கபடுகின்றனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவினை தொடர்புகொண்டு ஒப்புகையினை அளிக்கவும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் 2 நகல்களை சமர்ப்பிக்குமாறு
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவுவில் நேரிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி வாயிலாகவோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
செல்: 94981 – 70685

