கோடை,அக்,28.
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள் ஆவார்கள் இவர்கள் . ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று
கொடைக்கானலில் மருது பாண்டியர்கள் குருபூஜை விழா முன்னிட்டு
மருது பாண்டியர்கள்
திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது,
மெகா அன்னதானம் நிகழ்ச்சி நடத்தியது,
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி கொடியேற்றுதல்,போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை வி. ஆனந்த் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த சிறப்பு மிகு நிகழ்ச்சியில்
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின்
மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் பங்கேற்று மெகா அன்னதானத்தை துவக்கி வைத்தார். பின்னர் கோடை ஆனந்த் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதன் பொது செயலாளர்
வதிலை செல்வம் முன்னிலையில்
இணைந்தனர்
கொடைக்கானலில் சுமார் 1000
நபர்களுக்கு
மருது பாண்டியர்கள் குருபூஜை விழா முன்னிட்டு அறுசுவை விருந்து வழங்கும் விதமாக மெகா அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோடை ஆனந்த் செய்திருந்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெகா அன்னதானத்தை பொதுச் செயலாளர் வதிலை செல்வம் துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல்
மாவட்ட இளைஞரணி செயலாளர் கூல்.சுரேஷ், மாவட்ட தொண்டரணி செயலாளர் பெஞ்சமின் , கொடைக்கானல் நகர பொதுச் செயலாளர் பிரேம் மற்றும் நகர நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் கோடை ஆனந்துடன் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். உடன் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ஜி ஸ்டாலின்ஜி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஆர்.டி சரவணக்குமார், மாவட்ட செயலாளர் ஆர்.சதன் வேட்டையன், திண்டுக்கல் மாநகர செயலாளர் டி.எம் வினோத்ஜி, மாநில ஐ.டி.விங் பொதுச் செயலாளர் எம்.தினேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் எ.நவீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஈஸ்வரன்ஜி, மாவட்ட தொண்டரணி செயலாளர் பி.ரஞ்சித், மாவட்ட மாணவரணி பொது செயலாளர் டி.அன்னக்கொடி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெ.விஜய், வத்தலக்குண்டு ஒன்றிய துணை தலைவர் எஸ்.சுந்தரபாண்டி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சரவண பாலாஜி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் எஸ்.விக்கி, ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் தங்கப்பாண்டி, நகர இளைஞரணி பொது செயலாளர் அரவிந்த் மற்றும் கொடைக்கானல் ஒன்றிய தலைவர் தமிழ், கொடைக்கானல் நகர தலைவர் ரமேஷ், நகர இளைஞரணி தலைவர் சிவக்குமார், மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஆண்டுதோறும்
மருது சகோதரர்கள் குருபூஜை முன்னிட்டு அக்டோபர் மாதம் 27 ம் தேதி கொடைக்கானலில் மெகா அன்னதான நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகி கோடை ஆனந்த் சிறப்பாக செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது அதன்படி இந்த ஆண்டும் நேற்று கொடைக்கானலில் மருது சகோதரர்கள் குருபூஜை விழா கோடை ஆனந்த் ஏற்பட்டில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

