தூத்துக்குடி.
ஆயுத பூஜையை தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், வாகன ஓட்டிகளை பொறுத்த வரையில் ஆயுதபூஜை தினத்தை தங்களது தினமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அண்ணா பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம், புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட்-யை சார்ந்த சுமார் 250 ஓட்டுனர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் புதிய சீருடைகள் வழங்கினார்.

விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக வட்ட செயலாளர் கதிரேசன், மற்றும் கருணா, மணி, அல்பர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

