தூத்துக்குடி
சென்னையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும்; விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில், அணியின் ஆலோசகர் கோவி லெனின், மாநில இணை செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர்கள் கார்த்திக் மோகன், அழகிரி சதாசிவம், தருண், மதுரை பாலா, கேசவன், விஜய கதிரவன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்;ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு சிறந்த குழு செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதினை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, பழனிக்குமார், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி சி.என்.அண்ணாதுரை, விளாத்திகுளம் ஸ்ரீPதர், கரண்குமார், அருணா, கோவில்பட்டி ஹரிஹரன், மகேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் விளாத்திகுளம் பாரதிதாசன், கழுகுமலை பேரூர் வெங்கடேஸ்வரன், திரேஸ்புரம் பகுதி சுரேஷ்குமார், சண்முகபுரம் பகுதி மனோராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் கூறுகையில் இந்த ஐடி விங் அணி துவக்கப்பட்ட தினத்தில் இருந்து எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து எங்களை ஊக்குவிக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

