தூத்துக்குடி
உலக அளவில் பிரதிபெற்ற தசரா திருவிழா மைசூரில் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்;டம் குலசை முத்தாரம்மன் கோவில் ஜாதிமதம் கடந்த 10 நாட்கள் மாலை அணிவித்து உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றன. அனைத்து அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி கொடி ஊர்சுற்றி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக யாகசாலை பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது.


சிறப்பு நிகழ்ச்சியாக பத்திரகாளியம்மன் கோவில் இந்து சமயவகுப்பு மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பரதநாட்டியம், நடைபெற்று அனைத்து தரப்பு மக்களும் எல்லா செல்வங்களையும் வளங்களையும் தொழில்கள் சிறப்பாக நடைபெறவும் மழைவளம் பொழிந்து விவசாயம் செழித்து நோயற்ற வாழ்வு அனைவரும் வாழ வேண்டும் என பிராத்தனை செய்தனர். கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் கோவில் துணைச்செயலாளர் பொன்ஆனந்த் சரஸ்வதி ஹாட்பாக்ஸ் பரிசு பொருட்களை வழங்கினார்.
10 நாட்கள் தசரா விழாவை கோவில் நிர்வாகிகள், தசரா திருவிழா கமிட்டியாளர்கள், கோவில் மாதர்சங்கத்தினர், இளைஞர் முன்னேற்ற அணியினர் நடத்துகின்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

