தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் மாசு இல்லாத ஊராட்சியை உருவாக்கி பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரை பகுதியையும் பாதுகாக்கும் வகையில் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் மாஸ் கிளினிங் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்து கூறுகையில்
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஏற்கனவே தூய்மை பணியை முழுமையாக மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு பகுதியிலிருந்து கடற்கரையில் வந்து இணையும் காற்றின் மூலம் தேவையற்ற கழிவு பொருட்கள் நெகிழிகள் வந்து சேருகின்றன. இதனால் கடலுக்குள் செல்லும் கழிவு பொருட்களால் மீன் இனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மீனவர்களுக்கும் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் போக்கும் விதமாக இந்த மாஸ் கிளினிங் பணி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது
இந்த கழிவுகளை மாப்பிள்ளையூரணி குப்பை கிடங்கு பகுதிக்கு எடுத்துச்சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தூய்மையான மாப்பிள்ளையூரணி ஊராட்;சியை உருவாக்குவது போல தூய்மையான கடற்கரையும் அதன் பகுதியும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊராட்;சி மற்றும் சுகாதரா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த மாஸ்கிளினிங் பணியில் ஊராட்சி பகுதியில் ஈடுபட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற கழிவு பொருட்கள் வராத வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், வசந்தகுமாரி, சக்திவேல், பாலம்மாள் ஜெயசீலன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், திமுக கிளைச்செயலாளர் காமராஜ், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் தொம்மை அந்தோணி, சசி, இளைஞர் அணி கௌதம், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

