கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் நெடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன்நீட சுற்றுச் சூழல் அமைப்பு, தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் , அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மேற்கொள்கிறது. ஒரு கோடி பனை விதை நடவுப்பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 30 தேதி காலையில் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கடற்கரைகளில் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடி பனைவிதை நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் , அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பனைவிதை நடவுப்பணியை துவக்கி வைக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டதில் வேம்பார் தொடங்கி பெரியதாழை வரை 163.5 கி.மீ. தூர கடற்கரையில் 15 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட உள்ளது. அதற்கான கையேடு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலரின் கடித நகல் ஆகியவற்றை தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும் , தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்.இ.ஆப. அவர்களை சந்தித்து விளக்கக் கையேட்டினை வழங்கி தருவைகுளத்தில் நடைபெறும் பனைவிதை நடவுப்பணிக்கு தலைமை தாங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

