தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், புதுமைப்பெண், திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை இல்லந்தேடி கல்வி, இல்லந்தேடி மருத்துவம் வரும் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தளபதியார் தொடங்கி வைக்கிறார். இன்னும் பல சாதனைகள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே கலைஞர் ஆட்சியின் போதுதான் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சியில் 33 சதவீதம் வழங்கப்பட்டு இப்போது 50 சதவீதமாகிவிட்டது. இப்படி எல்லா வகையிலும் பெண்கள் வாழ்வு உயரவேண்டும் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். என்று தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கலைஞர் நூற்றாண்டு விழா வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மகளிர் அணியினரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தளபதியார் கூறியப்படி வெற்றி பெற வேண்டும். அதற்கு மகளிர் அணியினர் முழுமையாக அரசின் திட்டங்களையம் செய்த சாதனைகளையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி அமைப்பாளரும் முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நாமக்கல் ராணி, துணை அமைப்பாளரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி, முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த், மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெஸி பொன்ராணி, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி, துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூரி, மகளிர் அணி தலைவர் தங்கம், துணைத்தலைவர் மகாலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் கென்னடி, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான தங்கமாரியம்மாள், மாநகராட்;சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜான்சிராணி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, மரியகீதா, ஜெயசீலி, நாகேஸ்வரி, பாப்பாத்தி, மற்றும் மகளிர் அணி பெல்லா, டோலி, நாராயணவடிவு, யோகசெல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

