தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி திமுக அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கூட்டத்தில் ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெறுகிற ஆலோசனை கூட்டமானது மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி பணிகள் ஆலோசனை கூட்டம் அதனை தொடர்ந்து கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் பின்னர் இரு மாவட்டங்களின் ஓருங்கிணைந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி எழுச்சி மாநாட்டிற்கு ஆற்ற வேண்டிய பணிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணியில் பங்கு குறித்து உறையாற்றும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்து தெற்கு மாவட்ட த்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்;ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்;ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், மற்றும் மகளிர் அணி இளைஞர் அணி மாணவரணி ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் கிளைக்கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

