தூத்துக்குடி, செப். 1-
சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவரின் 308 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அருள்மிகு சிவனடி சாஸ்தா திருக்கோயில் வளாகத்தில் உள்ள பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வட்ட செயலாளர்கள் மில்லர், ராஜா, அருண்குமார், துரைசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன் மற்றும் வட்ட பிரதிநிதி அய்யப்பன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், தளவாய்புரம் காசி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்காவல பெருமாள், ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
===

