தூத்துக்குடி
இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி கடந்த செவ்வாய்கிழமை கால்நட்டு விழாவுடன் ஆரம்பமானது. இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சாமி தரிசனம் செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்;ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மாணவரணி சத்யா செந்தில்குமார், கோவில் தர்மகர்த்தா, ராமசந்திரன், தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர்கள் கனகராஜ், ஆறுமுகம், மாரியப்பராஜா, மணிகண்டன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சந்திரசேகர், துணைச்செயலாளர்கள் நாகராஜன், சந்தனராஜ், சுந்தர், மாசனமுத்து, கார்த்திஸ்துரை, முத்து, ராஜகுரு, சுப்பிரமணி, ராஜன், அர்ச்சகர்கள் இசக்கிமுத்து, லெட்சுமணன், பரமசிவன், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

