தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வார்டு வாரியாக நேரடியாக சென்று குறைகேட்பு முகாமில் மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அதில் சிலர் வேலைவாய்ப்பு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
அதை பெற்றுக்கொண்டு அவர்களிடம் திமுக ஆட்சி வந்த பிறகு தான் தளபதியார் மக்கள் நலனில் அக்கறை கொண்டு 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாமல் பல பணிகளையும் முறைப்படுத்தாமல் இருந்ததை தற்போது முறைப்படுத்தி செய்து வருகிறோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். அனைத்து பகுதிகளில் உள்ள குறைபாடுகளையும் ஒவ்வொன்றாக முழுமையாக தீர்த்து வைப்போம். என்று தெரிவித்தார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், கடம்பூர் பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜா, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், தகவல் தொழில்நுட்ப அணி நாகராஜன், சுரேஷ்குமார், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமநாதன், இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், நலம் ராஜேந்திரன், சக்திவேல், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், நெசவாளர் அணி சீதாராமன், வட்டச்செயலாளர்கள் கீதாசெல்வமாரியப்பன், பாலகுருசாமி, மற்றும் கருணா, மணி, அல்பட், அற்புதராஜ், மகளிர் அணி ரேவதி, பெல்லா, உள்பட பலர் உடனிருந்தனர்.

