தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து, சுதந்திர போரட்ட தியாகி வஉசிதம்பரம், மகாத்மா காந்தி, உள்ளிட்ட பல சிலைகள் இருந்து வருகின்றன. இதை மாநகராட்சி நிர்வாகம் பாரமரித்து வருகிறது.
இதில் ஒவ்வொரு தலைவர்களின் பிறந்தநாள், மற்றும் நினைவு நாளன்று அரசியல் கட்சி பிரமுகர்கள் பொது நல அமைப்பை சார்ந்தவர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.
வெளிப்புறத் தோற்றத்தில் இருப்பதால் சில சமயங்களில் பல்வேறு பறவைகள் அதில் அமர்வதும், தேவையற்றவைகளை விட்டுச்செல்வதுமாக இருந்து வருகின்றன. இதை முறைப்படுத்தி சிறு சிறு சேதமடைந்துள்ளவற்றை சரிசெய்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து சிதிலமடைந்த பழமையான தலைவர்களின் சிலைகளின் மேல் பூச்சிக்கள் உதிர்ந்து காணப்படுவதை தொடர்ந்து அதை புனரமைக்கவும் முடிவு செய்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கூறுகையில் மறைந்த தலைவர்கள் நம் நாட்டிற்கும் சுதந்திரத்திற்கும் மாநகரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்தவர்கள் அவர்களின் வழியை பின்பற்றி மாநகரில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதை பேணி பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உண்டு என்ற கடமை உணர்வோடு பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். வரும் நாட்களில் சீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் ரெகஸ்லின், வட்ட செயலாளர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

