தூத்துக்குடி
சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி 269வது வாரம் சாமுவேல்புரம், எஸ்எஸ் மாணிக்கபுரம், ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், அரசு வழக்கறிஞர் மாலாதேவி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், திமுக வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, ரவிந்திரன், மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

