தூத்துக்குடி மாநகராட்சி கூட்டஅரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம், ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்ததினம், செப்டம்பர் 15 அண்ணா பிறந்ததினம், டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம், தூத்துக்குடி மாநரகாட்சியில் சேதம் அடைந்த சாலைகளை நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2023 2024ல் கீழ் 484 லட்சம் மதிப்பீல் 13.25 கி.மீ நீளத்திற்கு 63 தார்சாலைகள் அமைத்தல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூராகவும் சுற்றுத்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பு ஊசி போடுதல் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், திட்டம் ராமசந்திரன், ரெங்கநாதன், சுகாதர ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், ஹரிகணேஷ், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், பட்சிராஜ், விஜயகுமார், மரியகீதா, கண்ணன், ராமர், சரவணக்குமார், முத்துவேல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, தெய்வேந்திரன், சுயம்பு, ஜான், ஜாண்சிராணி, ரிக்டா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, ராஜதுரை, சோமசுந்தரி, சரண்யா, வைதேகி, அதிஷ்டமணி, பேபிஏஞ்சலின், இசக்கிராஜா, பவாணி மார்ஷல், ஜாக்குலின்ஜெயா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ஜெயசீலி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலட்சுமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி, பத்மாவதி, வெற்றிச்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

