தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரி அம்மாண்டிவிளையில் அமைந்துள்ள புனித ஜாண்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 – 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் , பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும் ரூபாய் 17 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பாராட்டு விழா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவு பணி துவக்க விழாவும் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் எட்வின் ஞாணதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் பாபு , வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் , கல்லூரி நிறுவனர் அருட்தந்தை ஜான் போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹச்.வி.விஜய்வசந்த் கலந்து கொண்டு தூத்துக்குடி சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரன் அவர்களுக்கு பசுமை பாதுகாவலன் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக வெட்டுமடை கடற்கரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பீபீஜான் , மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் , குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் முனைவர் ஜெய் அருள் ஜோஸ்
.ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
எஸ்.தனலட்சுமி, டினோ , இராஜேஸ்வரி, சமூக சேவகி குமாரி கலா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர். பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி , நிறைவாக நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

