நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஓன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
நாகப்பட்டினம் ஜூன் 26
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஓன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 100 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமல சிறப்பு கால்நடை முகாம் நடைபெறுகின்றதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இம்மருத்துவ முகாம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வெங்கிடங்கால் ஊராட்சியில் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்றியத்திற்கு 20 கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாகப்பட்டினத்தில் 6 ஒன்றியங்களுக்கு 120 சிறப்பு கால்நடை கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. அதேபோல் இந்த வருடமும் கால்நடை பராமரிப்புத்துறை; ஜூலை 2023 மாதத்திலிருந்து ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் பிப்ரவரி 2024 மாதம் வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில் கால்நடை துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு நாகப்ட்டினம் மாவட்டத்தில் 960 கறவைப்பசுகளுக்கு வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீத மானியத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில கால்நடை துறையினரால் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி, தோல் கழலை நோய் தடுப்பூசி மற்றும் நான்கு முதல் 8 மாத வயதுடைய கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் கண்டுபிடித்து நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் மற்றும் துள்ளுமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு கால்நடைகளுக்கு நோய் வராமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு கால்நடைதுறை இலவசமாக தாது உப்பு கலவை வழங்கப்பட்டு, கால்நடைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து வருகிறது. கால்நடை மருத்துவர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நோயற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த செயலி மூலம் கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு கால்நடை வளர்ப்போர் பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.மு.விஜயகுமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் ச.உமாமகேஸ்வரி, கீழ்வேளுர் ஒன்றியக்குழுத்தலைவர் நா.வாசுகி, கீழ்வேளுர் வட்டார ஆத்மா குழுத்தலைவர் ப.கோவிந்தராஜன், வெங்கிடங்கால் ஊராட்சிமன்றத் தலைவர் பசுமதி ரமேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

