நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் ஜூன் 23
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்டு பயன்பெறும் 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6மாதம் முதல் 2வயது வரை 898 குழந்தைகளும் 2வயது முதல் 6 வயது வரை 403 குழந்தைகளும் உள்ளனர். இன்றையதினம் முன்னோட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் 10 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மோ.சியாமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

