நாகப்பட்டினம் மாவட்டம்
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஜூன் 20
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1800 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு 2213 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1299 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு வருடம் 13.06.2023 அன்று முதன்முதலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் தொடங்கப்பட்டது. இதுவரை 220.83 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்ய்ப்பட்டுள்ளது. இதில் 117 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார் மேலும் பருத்தி விவசாயி;கள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துறையாடினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்(பொ) வே.தேவேந்திரன் வேளாண்மை விற்பனைக் குழு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

