தூத்துக்குடி.
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுசரிக்க பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்து உலக பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பால குருசாமி, பகுதி செயலாளர் ரவீந்திரன், பத்திரிகையாளர்கள் சண்முக சுந்தரம், பிரபாகரன், ஜாய்சன், சந்திரன், மோகன்ராஜ், முத்துராமன், மாரிராஜா, ஜெகஜீவன், விக்னேஷ்வரன், மணிகண்டன், செல்வின் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

