தூத்துக்குடி
கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்து வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலு சேர்த்திடும் வகையில் 1 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்த்திட “உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பு முழக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ; வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி நெல்லை மத்திய மாவட்டத்தில் ஏப்ரல் 3ந் தேதி தொடங்கி புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக மாநகர பகுதிகளில் வார்டுகள் தோறும் 2000 புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவத்தை வட்ட செயலாளர்களுக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வஹாப் வழங்கினார்.
உடன் தலைமை கழக பார்வையாளர்கள் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட அவைத் தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், மாவட்ட துணை செயலாளர் தர்மர், மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், நெல்லை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி ஆகியோர் உள்ளனர்.

