தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி.வீ சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பாலஷண்முகதேவி தலைமையுரை வழங்கினார். முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறைத் தலைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார்.
கருத்தரங்கில் துறைத்தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், தொழில் நுட்ப ஆதரவு மையம் முனைவர் ஆரோக்கியதாஸ் முதல் கட்ட அமர்வில் அறிவுசார் சொத்து உரிமைகளின் புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவாக விளக்கினார். பொறியியல் பள்ளி பட்ட ஆய்வாளர், மொனா பல்கலைக்கழகம் முனைவர் கௌதமன் இரண்டாம் கட்ட அமர்வில் கார்பனின் குவாண்டம் புள்ளிகள் மற்றும் பொருளாதார பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். மூன்றாம் கட்ட அமர்வில் பொன்சதீஸ்குமார், மூத்த முனைவர் பட்ட ஆய்வாளர், போஸ்டெக் தென்கொரியா வேதியியலில் அதி மூலக்கூறுகளின் அணுகுமுறை பற்றி விளக்கினார். இதில் சுமார் 242க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவியர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கருத்திரங்கில் வேதியியல் ஆராய்ச்சித்துறை உதவிப் பேராசிரியர்கள் யோகேஸ்வரி நித்யா, சங்கரவடிவு உள்பட ஆசிரியாகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறையைச் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சித்துறை மாணவிகளும், பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சண்முக பிரியா நன்றியுரை வழங்கினார்.

