வேதாரணியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
வேதாரணியம் மார்ச் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 11.03.2023 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன்மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். டி .ரவிச்சந்திரன்
தலைமையற்க
மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ. ஒன். என் . மாரியப்பன் வரவேற்பு உரையாற்றினார். அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். கிரிதரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வி .சுப்பையன்,
நகரச் செயலாளர் எம். நமச்சிவாயம்,ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன்,மாவட்ட பொருளாளர் பி. சண்முகராசு மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.விழாவில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,நாகை மாவட்ட கழக செயலாளர்,தமிழ்நாடு முன்னாள் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்,
வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. எஸ். மணியன் சிறப்புரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் சிறப்புகளை பட்டியல் இட்டு பேசினார்.விழாவில் 35 மாற்றுக் கட்சியினர் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியண் முன்னிலையில் அதிமுகவில் இணைத்தனர்.விழாவின் இறுதியில் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சோம.வெங்கட்ராமன் நன்றி உரையாற்றினார்.

விழாவில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள்,ஒன்றிய நகர பேரூர் சார்பு அணி செயலாளர்கள், வேதாரணியம் கிழக்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழகச் செயலாளர்கள்,வேதாரணியம் மேற்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்,வேதாரணியம் நகர கழக சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

