தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தேசிய மகளிர் தின விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மகளிர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசுகையில்: மக்களுக்கான திட்டங்கள் பற்றியும் நாட்டைப்பற்றியும் முழுநேரமும் சிந்திக்கும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம். மாநகராட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி பொறுப்பேற்ற பின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் தின விழா நிகழ்ச்சி தான் நடைபெற்றது. பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடுகளையும் கடந்து 60 உறுப்பினர்களில் 32 பேர் பெண்கள் உள்ளனர். துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள 1100 பேர் 750 பேர் பெண்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டு வரும் அவர்கள் வீடு தோறும் குப்பைகளை சேகரிக்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளையெல்லாம் மறந்து விட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றுகின்றனர். வாக்காளர்களில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். அதுபோல் நமது மாவட்டத்தில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்;சியில் இரண்டு மண்டல தலைவர்கள் என பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதே போல் பெண்களுக்கென்று பேருந்தில் இலவச கட்டணம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பு முடியும் வரை மாதம் 1000ரூபாய், என என்னற்ற திட்டங்களை நாட்டுமக்களுக்காக வழங்கி வருகின்றார். மாநகராட்சியில் வளர்ச்சிக்கும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வரும் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ஒரு நாள் குடிதண்ணீர் வரவில்லை என்றாலும் பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றி வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழுமையாக ஓத்துழைப்பு வழங்கி வரும் வியாபாரிகள் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.

துணை மேயர் ஜெனிட்டா பெண்கள் முன்னேற்றம் குறித்த விளக்கவுரையும், துணை ஆணையர் குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸின், ஜெயசீலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேயர் ஜெகன் பெரியசாமி மகளிர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், பொன்னப்பன், காந்திமதி, ஜாக்குலின் ஜெயா, ரிக்டா, எடின்டா, கற்பககனி, பேபி ஏஞ்சலின், நாகேஸ்வரி, விஜயலட்சுமி, சரவணக்குமார், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், வைதேகி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, மும்தாஜ், முத்துமாரி, ராமுத்தம்மாள், ரெங்கசாமி, ஜெபஸ்டின்சுதா, மாநகராட்சி அதிகாரிகள் சந்திரமோகன், தனசிங், சேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர், ராஜசேகர், மாவட்ட திமுக பிரதிநிதி செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி பொறுப்பு வருவாய் உதவியாளர் சுமதி நன்றியுரையாற்றினார்.

