நெல்லை டவுணில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு நெல்லை மாநகர காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுண் ஆர்ச் பகுதியில் தொடங்கி கீழரதவீதி தெற்குரதவீதி மேற்குரதவீதி தொண்டர் சன்னதி பாறையடி ஆகிய பகுதிகள் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


கொடி அணிவகுப்பில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், டவுண் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு டவுண் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் காவல் ஆளினர்கள் மத்திய துணை ராணுவ படையினர் பங்குபெற்றனர்
செய்தி படத்திற்கு கொம்பன் ராஜ்

