தூத்துக்குடி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் அதிமுக தேமுதிக நாம்தமிழர் வேட்பாளர் உள்பட 77 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் படி கிறிஸ்தவ குருவானவர்கள் முக்கிய பிரமுகர்கள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஈரோடு வில்லரசன் பட்டி, நால் ரோட்டில் அனைத்து திருமண்டல போதக குருவானவர்கள் ஜேக்கப் லிவிங்ஸ்டன், சத்யராஜ், கபில், டார்வின், செழியன், ஆல்ட்ரின் நாகரஷ், அஜெய், ஆகியோரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் போது அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு தலைவருமான செங்கோட்டையன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், சண்முகபுரம் பரி பேதுரு பேராலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகரன், அமைப்பு சாரா ஓட்டுநர்; அணி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

