• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக அரசின் சாதனைகளை வீடு தோறும் மகளிர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் –  மாப்பிள்ளையூரணியில் ஜெஸி பொன்ராணி அறிவுரை

policeseithitv by policeseithitv
February 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக அரசின் சாதனைகளை வீடு தோறும் மகளிர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் –   மாப்பிள்ளையூரணியில் ஜெஸி பொன்ராணி அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படியும் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வழிகாட்டுதலின்படியும் தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் தேர்வு குறித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

நிகழ்;ச்சிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி பிரச்சாரக் குழு செயலாளரும், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜெஸி பொன்ராணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மகளிரணி பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி கட்சிக்காக ஆற்றியப் பணிகள், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்களா? என்ற கேள்விகள் கேட்டார். பின்னர் பேசுகையில் இந்த தொகுதியின் எம்.பி.யாக கனிமொழி எம்.பி. பணியாற்றி வருகிறார்கள். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் மகளிரணி, மகளிர் தொண்டரணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு பொறுப்பாளராக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதில் பணியாற்றி வருகிறார்கள். இதை அனைவரும் கருத்தில் கொண்டு மகளிரணியை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் நம் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறுகின்ற அனைத்து சாதனை திட்டங்களையும் பலன்களையும் வீடுதோறும் மகளிரணியினர் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களது ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். அனைவரையும் பாகுபாடு இல்லாமல் பார்ப்பவர். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு ஒன்றிய பகுதியில் மகளிரணியினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தெற்கு மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் கௌதம் உள்பட ஒன்றியத்திற்குட்பட்ட மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

Next Post
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In