தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் கேமிரா மூலம் கண்காணிப்பு பணி துவக்க விழா: பஞ்.தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி, பிப்,7
தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் தாளமுத்துநகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் இருந்து வருகின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வு சம்பவங்களை கண்காணிப்பதற்கு உயர் கோபுர கண்காணிப்பு கேமிரா அமைத்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தாளமுத்துநகர் மீனவர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டது.
உயர்கோபுர கண்காணிப்பு கேமிரா திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.
தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கண்காணிப்பு அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் செய்து வருகிறார். அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி அவர் உதவி செய்வது மட்டுமின்றி, அரசின் திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு செல்வதில் நல்லமுறையில் திறம்பட பணியாற்றி வருகிறார். அவருக்கு இந்த தருணத்தில் காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அதே போல் இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் காவல் துறையும் கண்காணிப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. பல இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் இதுபோன்ற கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.


விழாவில், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், சேசுராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், தாளமுத்து நகர் தனிப்பிரிவு காவலர் முருகேசன் மற்றும் கௌதம், மீனவர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள்; பலர் கலந்து கொண்டனர்.

