தூத்துக்குடி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கன்டேயன் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன், நவநீத கண்ணன், வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாநகர திமுக துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கனகராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் கருணா, அல்பட், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

