வேதாரணியத்தில் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
வேதாரணியம் ஜனவரி 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு எம் நமச்சிவாயம் நகர கழகச் செயலாளர் தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர் வேதாரணியம் மேற்கு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டி.வி சுப்பையன் வரவேற்புரை ஆற்றினார் .
அவை.ஆர். பாலசுப்பிரமணியன் ,தங்க. சௌரிராஜன் ,
கமலா அன்பழகன்,கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் கே என் தங்கமணி,தலைமைக் கழகப் பேச்சாளர் மாத்தூர் சேகர் முன்னிலை வைத்தனர்.
கழக அமைப்புச் செயலாளர்,நாகை மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்,வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர்
ஓ எஸ் மணியன்
சிறப்புரையாற்றினார். அவர் உரையாற்றும் போது கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பெருமைகளை பற்றி பேசினார்.
மேலும் பேசும்போது இன்றைய விலைவாசி உயர்வு சொத்துவரி உயர்வு மின்சார கட்டண உயர்வு, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவற்றை பற்றி பேசினார்.

இறுதியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர். கிரிதரன் நன்றி உரையாற்றினார். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் சார்பு அணி செயலாளர்கள்,
அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

