டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பமாகியது வரவேற்புரை நிகழ்த்தினார்
விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி தலைமை தாங்கினார். மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார், டெங்கு காய்ச்சல் பற்றி டெங்கு எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியும் மாணவ மாணவிகள் விழிப்புடன் இருந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கருத்துக்கள் வழங்கினார்

டாக்டர் ரேணுகா மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி அவர்கள் டெங்கு காய்ச்சல் பற்றி மாணவ மாணவிகளுக்கு எப்படி நாம் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் நமது பக்கத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறினார் சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின். பாரதிராஜா. அருண்குமார் சுரேஷ் பள்ளி செயலாளர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நன்றியுரை ஆற்றினார் தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என் சி சி ஆசிரியர் ஆல்பன் அவர்கள் செய்திருந்தார்

