தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு பகுதியில் உள்ள ஜே ஜே நகர் ,காமாட்சி நகர் ,திரு வி க நகர் தெரு ஆகிய 4 தெருக்களில் சுமார் 5 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். செய்வதறியாது திணறிய அப்பகுதி மக்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் திரு வி க நகர் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்துள்ளதாகவும் புகார் கொடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதிமுக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான
மந்திரமூர்த்தி மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு
5 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும்
அதை உடனே சீர் செய்து கொடுக்குமாறு
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு
களத்தில் இறங்கினார் கவுன்சிலர் மந்திரமூர்த்தி.

மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றியதன் பலன் அந்தப் பகுதிகளுக்கு மீண்டும் 5 நாட்களுக்குப் பிறகு தண்ணீர் வர துவங்கியது
தற்போது அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் மேலும் பகுதி மக்கள் குடிநீர் சம்பந்தமான பிரச்சனையும் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டதால்
அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்
மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா
51வது வார்டு மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்திக்கு தற்போது பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிகிறது.

செய்தி தொகுப்பு: சக்திவேல்

