தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், மற்றும் மாவட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள், உட்பட அனைவருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளமான சரவணக்குமார், நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள், மாப்பிள்ளையூரணி பொதுமக்கள் பொதுநல அமைப்பு, மற்றும் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தரப்பினரும் பஞ்சாயத்து தலைவரிடம் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனையின் பேரில் இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள், தேவைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு வரும்
பஞ்சாயத்து தலைவர் சிரித்த முகத்தோடு அனைத்து மக்களின் குறைகளை கேட்டு அதனை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் பஞ். தலைவர் சரவணகுமார் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள அனைத்து தரப்பினராலும்
பாராட்டப்படுவதோடு இந்த பஞ்சாயத்து
பகுதியில்
“மக்கள் பஞ்சாயத்து தலைவர்”
என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
சமீபத்தில்
மாப்பிள்ளை யூரனி பகுதி முழுவதும்
2023ம் ஆண்டு காலண்டர் விநியோகம் செய்தார் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சார்பிலும் காலண்டர் இந்தப் பகுதி முழுவதும் சரவணகுமார் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



” மக்கள் பஞ்சாயத்து தலைவர்” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்
மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் ஜாதி, மதத்திற்கு, அப்பாற்பட்டு அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும்
அந்த மக்களோடு மக்களாக இணைந்து மகிழ்ச்சியை கொண்டாடுவதில் அவருக்கு நிகர் அவரே அந்த அடிப்படையில் பொங்கல் விழா நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருடன்
பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் , ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், பாலுநரேன், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் கௌதம் உட்பட ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

