நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ். தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜனவரி 12
நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்., தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் 0 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை மறுமதிப்பீடு செய்வதற்கு மாவட்ட அளவில் வட்டாரம் தோறும் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அட்டைகள் பெறுவதற்கு 13.01.2023 அன்று திருமருகல் வட்டாரம் – அரசு மேல்நிலைப்பள்ளி திட்டச்சேரி, 19.01.2023 அன்று கீழ்வேளுர் வட்டாரம் – அரசு உயர்நிலைப்பள்ளி, கீழ்வேளுர், 20.01.2023 அன்று கீழையூர் வட்டாரம் – அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பூண்டி வடக்கு, 24.01.2023 அன்று தலைஞாயிறு வட்டாரம் – வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, மணக்குடி, 25.01.2023 அன்று வேதாரண்யம் வட்டாரம் – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேதாரணயம் ஆகிய தேதிகளில் வட்டார அளவில் காலை 9.30 மணி முதல் முகாம்கள் நடைபெறுகிறது,
இம்முகாமில், ஏற்கெனவே விண்ணப்பித்து அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு அட்டை பெறலாம் எனவும் மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் , வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றுடன் கலந்துகொன்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில் 62 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 05 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியினையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பதிவு புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்.வழங்கினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

