நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 22
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. நபார்டு வங்கியின் மூலம் 2023-24 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ. 3293.42 கோடி வழங்கிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுகிய கால பயிர் கடனாக 1727.06 கோடியும், நீண்ட கால விவசாய கடனாக ரூ. 2726.40 கோடியும் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு ரூ. 263.32 கோடி எனவும், இதர முன்னுரிமை கடனாக ரூ. 576.74 கோடியும் வழங்கிட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் 2022-23ஆம் ஆண்டு முன்னரிமைக் கடன் இலக்கை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை திட்ட அறிக்கையை விளக்குவதாகவும், இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை மற்றும் கட்டுமான வசதிகளை பெருக்க, விவசாயத்தை ஒரு இலாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றவும் பயன்படும் என்றும் கடன் இத்திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை இன்று வெளியிட்டு, தனிநபர் கடனுக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் சு.விஸ்வந்த்கண்ணா, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், உதவி மேலாளர் ம.செந்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

