நாகப்பட்டினம் மாவட்டம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் என்.கவுதமன் முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 18
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாடர்ன் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், தலைமையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் என்.கவுதமன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் மாணவ, மாவணவிகளுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை மூலம் ஆண்டுதோறும் 12000 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். 11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் சிறுபான்மையின பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஊக்கத்தொகையாக தலா ரூ.500 1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலமா மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து இலவச அட்டைகள் பெற்ற உறுப்பினர்களுக்கு இறப்பு உதவித்தொகை ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோலவே கிறித்துவ தேவாலய பணிளாளர்களுக்கும் வாரியம் அமைக்க அரசு கொள்கை அளவில் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் ஆகிய சங்கங்கள் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டால் அவற்றை இரு மடங்காக அரசு வழங்கும். இதன் மூலம் ஏழை, எளிய முஸ்லிம் மகளிர் மற்றும் கிறித்துவ மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கலாம். திட்டத்தின் மூலம் நாகூர் தர்காவிற்கு வருகை தரும் புனித பயணம் செய்பவர்குள் தங்க ஏதுவாக ரூ.140 இலட்சம் செலவில் யாத்திரிகர் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.33,000 மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் க.சங்கர், நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

