நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 8
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் உடன் கலந்துக்கொண்டார்.முன்னாள் படை வீர நல துறை சார்பில் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடிநாள் விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொடிநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், படையில் பணிபுரிவோரின் குடும்பத்தினர்கள் என சுமார் 350 நபர்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சுமார் 09 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் 02 முன்னாள் படைவீரரின் சார்ந்தோர்களுக்கு கண்கண்ணாடி நிதியுதவி என மொத்தம் 11 பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,62,500 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கி முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை கௌரவித்தார்கள்.இக்கொடிநாள் விழாவின்போது வசூல் செய்யப்படும் தொகையானது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்காக செலவிடப்படுகிறது.இவ்விழாவில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல துறை சார்பில் நடைபெறும் கொடிநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஹ.ஆயிஷா பேகம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

